நூற்றாண்டு கடந்த வேப்பமரம்: அழிப்பு!
நூற்றாண்டு கடந்த வேப்பமரம்: அழிப்பு!

(மாதவன்)

யாழ்ப்பாணத்தில் நூற்றாண்டு கடந்த வேப்பமரம் ஒன்று சட்டவிரோதமாக அழிக்கப்பட்ட நிலையில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள்  நடவடிக்கை எடுப்பதற்கு மௌனம் காப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இணுவில் பகுதியில் உள்ள மதஸ்தாபனம் ஒன்றின்  வளாகத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அப்பகுதிக்கு பொறுப்பாக உள்ள குருவானவர் ஒருவரால், சில மரங்கள் வளாகத்தில் இடையூறாக உள்ளதாக தெரிவித்து கிராம சேவையாளர் ஊடாக அகற்றுவதற்கான அனுமதி கோரப்பட்டு பிரதேச செயலகம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த அனுமதியை தவறாக பயன்படுத்தி, அனுமதி வழங்கப்படாத வேம்பு ஒன்று அகற்றப்பட்டுள்ளதுடன் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் கடந்த (30.04.2024) அன்று இடம்பெற்றுள்ளது. அச்சம்பவம் தொடர்பில் அவதானித்த மற்றுமொரு குருவானவர் புகைப்படங்களை எடுத்ததுடன், ஆதீன பொருளாளர் மற்றும் சொத்து பாதுகாப்பு அலுவலரிடம் வினவியுள்ளார்.

ஆயினும், குறித்த சம்பவம் தொடர்பில் தமக்கு தெரியாது என அவர்கள் கூறியதுடன், பேராயரின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளனர். 

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குருவானவர், முறையாக அனுமதி பெறப்பட்டே மரம் வெட்டப்பட்டதாகவும், பேராயரும், செயலாளரும் அனுமதித்ததாகவும் கூறுவதுடன், சட்ட ரீதியான அனுமதிகளை காண்பிக்க மறுத்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமளித்துள்ள தென்னிந்திய திருச்சபையின் செயலர், உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட இணுவில் பகுதியிலுள்ள திருச்சபையின் குருமனையின் பின்னால் மேற்படி வேப்பமரம் இருந்தது என்றும், அந்த மரத்தால் தனது மதில் வெடிக்கின்றது என அயல் காணியில் இருந்தவரால் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் தென்னிந்திய திருச்சபையின் தலைமைப்பீடத்துக்கு கிடைத்ததாகவும் அதற்கு அமைவாகவே அதனை வெட்டி அகற்றுவதற்கும், மரத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் பணத்தில் இணுவிலுள்ள தேவாலயத்தை புனரமைப்பதற்கும் தென்னிந்திய திருச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று குறிப்பிட்டார். 


தென்னிந்திய திருச்சபையின் தீர்மானம் உடுவில் பிரதேச செயலகத்துக்கு அனுப்பப்பட்டு உடுவில் பிரதேச செயலரால் சம்பந்தப்பட்ட கிராம அலுவலருக்கு வழங்கப்பட்டு, கிராம அலுவலர் பரிந்துரையுடன் பிரதேச செயலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். அதற்குரிய அனுமதி வருவதற்கு காலதாமதம் ஏற்பட்ட நிலையில் அருட்தந்தையால் மரம் வெட்டப்பட்டது. இதுவே நடந்தது. இங்கு எந்தவொரு முறைகேடும் இடம்பெறவில்லை, என்று தெரிவித்தார். (அ-ப)

#eelamnews #newsupdate #Uthayanpaper #sudaroli #sanjeevi #uthayannews #jaffnauthayan

144 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.