(இனியபாரதி)
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தரும் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பிதாமகருமான பேராசிரியர் சுப்பிரமணியம் வித்தியானந்தன் அவர்களின் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு யாழ் போதனா மருத்துவமனையின் அருங்காட்சியகத்தில் அவரது திருவுருவப்படம் (08) இன்று மாலை யாழ் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மற்றும் அவரது பிள்ளைகளால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
(1924/05/08) அன்று பிறந்த பேராசிரியர் S.வித்தியானந்தன் (1989/01/22) இறைவனடி சேர்ந்தார்.
இந்நிகழ்வில் யாழ் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி,அகில இலங்கை இந்து மா மன்றத்தின் உப தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன், யாழ் பல்கலைக்கழகத்தின் கலைபீட பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம், யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறை தலைவர் வாழ்நாள் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி இ.சுரேந்திரகுமரன், யாழ் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், யாழ் போதனா மருத்துவமனையின் மருத்துவர்கள்ஃ பணியாளர்கள் அன்னாரின் குடும்ப உறவுகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.