(புதியவன்)
இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்துக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை நாளை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் அதில் தற்போது சிறிய மாற்றம் செய்யப்பட்டு மே மாதம் 17ஆம் திகதி தொடக்கமே சேவைகள் ஆரம்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படகுசேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அந்தச் செய்தி குறிப்பில், சில சட்டரீதியான அனுமதிகள் காரணமாகவும், தாமதமான கப்பலின் வருகையாலும் எமது திட்டமிட்ட நாகை - காங்கேசன் - நாகை பயணிகள் கப்பல் சேவையை நாளை முதல் இயக்கமுடியவில்லை. சேவையை வரும் மே 17இல் இருந்து இயக்குவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
13/05/2024 45 முதல் 16/05/2024 வரை பதிவுகளை மேற்கொண்ட பயணிகளின் பதிவுகளை 17/05/2024 க்கு மாற்றியுள்ளோம். பதிவு செய்த பயணிகள் 17/05/2024 அன்று அல்லது அதற்குப் பின்னர் அவர்கள் விரும்பிய திகதிகளில் பயணிக்கலாம் அல்லது செலுத்திய கட்டணத்தை முழுமையாக மீளப்பெற விரும்பினால், customer.care@sailindsri.com என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொண்டு செலுத்திய கட்டணத்தை பெற்றுக்கொள்ளலாம் என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.