(புதியவன்)
வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி யாழில் பண மோசடியில் ஈடுபட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தீவக அமைப்பாளர் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள சந்தேகநபர் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுளளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பெற்று மோசடி செய்துள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட தரப்பால் யாழ்.மாவட்ட பெருநிதி குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், கைது இடம்பெற்றுள்ளது.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.