(புதியவன்)
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை பிணையில் விடுவிக்க கொழும்பு தலைமை நீதிவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 20ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பொலிஸாரால் சந்தேக நபராக பெயரிடப்பட்ட டயானா கமகே, புலம்பெயர்ந்தோர் மற்றும் குடியேற்றவாசிகள் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாகவும் தம்மை கைது செய்ய உள்ளதாகவும் ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டதாகக் குறிப்பிட்டு, தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் இன்று முன்னிலையானார்.
5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல உத்தரவிட்ட நீதிவான், பாதகமான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என சந்தேக நபரை கடுமையாக எச்சரித்தார்.
குடிவரவு சட்டத்தை மீறி போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராக பெயரிடுமாறு கொழும்பு தலைமை நீதிவான் திலின கமகே நேற்று உத்தரவிட்டிருந்தார் என்றும் பொலிஸார் தேடிச் சென்றபோது அவரைக் காணவில்லை என்றும் நீதிமன்றுக்கு அறிக்கையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.