ரி20 உலகக்கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்காவைத் தோற்கடித்து இந்தியா வெற்றிபெற்றது.
நேற்றைய தினம் இடம் பெற்ற இறுதியாட்ட ரி20 உலகக்கிண்ணத் தொடரில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது
இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா முதலில் துடுப்பெடுத்தாடினார்
ஆரம்ப வீரர்களான கோலி மற்றும் ரோகித் இருவரும் அதிரடியுடன் ஆட்டத்தை ஆரம்பித்தனர் பின் 9 ஓட்டங்களுடன்
ரோகித் சர்மா ஆட்டமிழந்து வெளியேறினார்
போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தவேளை 76 ஓட்டங்களுடன் கோலி ஆட்டமிழந்து இந்திய அணி 7 விக்கெட்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்குக் களமிறங்கிய தென்னாபிரிக்க அணிக்கு ஹென்றிக்ஸ் மற்றும் குயின்டன் டி ஹொக் ஆரம்ப வீரர்களாகக் களமிறங்கினார்கள்.
வீரர்கள் ஆட்டமிளப்புக்குள்ளாகி தென்னாபிரிக்க அணி 27 பந்துகளில் 52 ஓட்டங்களைக் குவித்து, இந்தியாவின் உலகக்கிண்ண கனவில் மண்போட்டது.
இறுதி 30 பந்துகளில் 30 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில்
பும்ரா, அர்ஷ்டீப் சிங் மற்றும் பாண்டியா மூவரும் மிகமிக நேர்த்தியாகப் பந்து வீசி பாண்டியா 3 விக்கெட்களையும், அர்ஷ்டீப் சிங் மற்றும் பும்ரா இருவரும் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றி இந்திய அணி 9 ஓட்டங்களால் வெற்றி பெற்றார்கள் இதன் மூலம் இந்தியாவின் 13 ஆண்டுகால உலகக்கிண்ணக் காத்திருப்பு நேற்று இரவுடன் நிறைவுக்கு வந்தது.
ஆட்டநாயகனாக விராட் கோலி தெரிவானாதோடு தொடராட்ட நாயகனாக பும்ரா தெரிவானார். என்பதும் குறிப்பிடத்தக்கது. (ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.