இன்றைய தினம் புது குடியிருப்பு பகுதியில் இருந்து கப்ரக வாகனத்தில் முதிரை மரக்குத்திகளை ஏற்றி பயணித்த கப் ரக வாகனம் , வாகன சாரதி மற்றும் வாகன உதவியாளர் போன்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தர்மபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக தர்மபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெத்தலியாற்றுபகுதியில் வீதிச்சோதனையின் போது இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
அத்துடன் நெத்தலியாறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகல்வி ஈடுபட்ட டிப்பர் வாகனம் ஒன்றும் இன்றையதினம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் மூவரையும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தர்மபுர பொலிஸ் அதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.