செல்வன்.
முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்பட்ட தேசிய, மாகாண ரீதியில் வெற்றியீட்டிய மாணவர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை(03) முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் மகளிர் பாடசாலையில் வலயக்கல்வி பணிப்பாளர் இ. தமிழ்மாறன் தலைமையில் நடைபெற்றது.
வெற்றியீட்டிய மாணவர்களை பான்ட் வாத்திய அணியினரின் மரியாதையுடன் அழைத்துவரப்பட்டு மங்களச்சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகண கல்விப் பண்பாட்டலுவர்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிறஞ்சனும் சிறப்பு விருந்தினராக வடமாகண பணிமனை உதவி கல்வி பணிப்பாளர் (உடற்கல்வி) இ. இராஜசீலனும் கலந்து சிறப்பித்தனர்.
அதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து பரிசில்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.