புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தை மக்கள் பாவனைக்காக கையளிப்பது தொடர்பான கள ஆய்வு முல்லைத்தீவு அரசாங்க அதிபர் தலைமையில் நேற்று நடைபெற்றது.
குறித்த கள ஆய்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், பிரதேச செயலாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையினர், உள்ளூராட்சி அதிகாரசபை, கரைதுறைப்பற்று பிரதேச சபை, தனியார் போக்குவரத்து மற்றும் அரச போக்குவரத்து சபையினர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் அன்ரனி ஜெயநாதன், பீற்றர் இளஞ்செழியன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில் எதிர்வரும் 24ஆம் திகதி முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தை மக்கள் பாவனைக்காக கையளிப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நகர திட்டமிடல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தின் நிர்மாணப்பணிகள் நிறைவடைந்துள்ள போதிலும் இதுவரை பேருந்து நிலையம் பயன்படுத்தப்படாமல் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.