முல்லைத்தீவு முள்ளியவளை நீராவிப்பிட்டிப் பகுதியில் வசித்த இளம் குடும்பமொன்றைக் காணவில்லை என உறவினர்களால் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காணாமற்போன பெண்ணின் தாயாரால் இந்த முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவ்முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
எனது மகளும், மருமகனும் தனியாக வசித்து வந்தார்கள். தொலைபேசியில் உரையாடி வந்த மகள் கடந்த 21ஆம் திகதிக்குப் பின்னர் உரையாடவில்லை. அவருடைய அலைபேசியைத்தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து அவர்கள் குடியிருந்த வீட்டுக்குச் சென்று பார்த்தபோது மகளையும் அவருடைய கணவரையும் அங்கு காணவில்லை என்று அந்தத் தாயார் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை முள்ளியவளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.