முல்லைத்தீவு நீராவிப்பிட்டி கிழக்கு கிராமத்தில் இளம் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
கீதா என்ற வயது 23 இளம்யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சந்தேகத்தின் அடிப்படையில் அவரது கணவர் (வயது 23) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் கடந்த 3 வாரமாக வாடகை வீடொன்றில் தங்கிவந்த நிலையில் வீட்டின் பின்பாகவுள்ள மலசலகூடத்திற்கு அருகே குழி தோண்டி புதைக்கப்பட்ட நிலையில் குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
குறித்த பெண் தொலைபேசியில் தனது தாயாரிடம் நாளாந்தம் உரையாடிவந்த நிலையில் கடந்த 21 ஆம் திகதிக்கு பின்னர் தொலைபேசி துண்டிக்கப்பட்டுள்ளது.
சந்தேகமுற்ற நிலையில் கடந்த திங்கட்கிழமை வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர்கள் வீட்டின் பின்புறம் புதிதாக மண்ணால் நிரப்பப்பட்ட குழி ஒன்று காணப்படதை அடுத்து குறித்த பெண்ணின் தாயார் முள்ளியவளைபொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.
இதனை அடுத்தே விசாரணைகள் மேற்கொண்ட போது குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.