முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 14அகவை சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டதுடன் குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவ அறிக்கையின் பிரகாரம் சிறுமியை இரு வேறு சந்தர்ப்பங்களில் இருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது . கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சிறுமையை மூன்று பேர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.