ராஜராஜ சோழனின் ஜாதக ரகசியம் : 1000 ஆண்டுகளை கடந்து புகழ் நிலைக்க இது தான் காரணம்.
ராஜராஜ சோழனின் ஜாதக ரகசியம் : 1000 ஆண்டுகளை கடந்து புகழ் நிலைக்க இது தான் காரணம்.

 

சோழ வரலாற்றில் மனுநீதி சோழனுக்கு பிறகு அனைவராலும் போற்றக் கூடியவராக இருப்பவர் ராஜராஜ சோழன் தான். ராஜராஜ சோழனின் பிறப்பை போல் இறப்பும் இன்று வரை விடை தெரியாத புதிராக ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. அதே போல் இவரது புகழ் மட்டுமே எப்படி இத்தனை ஆண்டுகள் கடந்தும் பேசப்படுகிறது என்பதும் பலருக்கும் நுரியாத விஷயமாக உள்ளது. 

​ராஜராஜ சோழனின் புகழ் :

ராஜராஜ சோழன், இவரை தெரியாதவர்களே இருக்க முடியாது. வரலாறு தெரியாதவர்களுக்கும் கூட ராஜராஜ சோழனையும், அவர் கட்டிய தஞ்சை பெரிய கோவிலின் புகழை பற்றியும் தெரியாமல் இருக்காது. தமிழர்களின் அடையாளமாகவும், பாரம்பரியத்தின் அடையாளமாகவும் ராஜராஜ சோழனையும், தஞ்சை பெரிய கோவிலையும் இன்று வரை புகழ்ந்து வருகிறோம். தமிழர்கள் மட்டுமல்ல உலகம் முழுவதும் ராஜராஜ சோழனின் புகழ் பரவி இருக்கிறது என்றால் அது பொய்யாகாது.

உலகையும், இந்தியாவையும், தமிழகத்தையும் எத்தனையோ அரசர்கள், பேரரசர்கள், ஆட்சி செய்துள்ளார்கள். மன்னர் ஆட்சி முறை முடிவுக்கு வந்து, இன்று மக்களாட்சி காலமும் வந்து விட்டது. ஆனாலும் ஒரு சிலர் பெயரும், புகழும் மட்டுமே இன்று வரை நிலைத்து நிற்கிறது. சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் பலர் தமிழகத்தை ஆட்சி செய்து, பல கோவில்களை கட்டி இருந்தாலும் ராஜராஜ சோழன் அளவிற்கு யாரையும் நாம் புகழ்வது கிடையாது. அதே போல் எந்த ஒரு மன்னருக்கும் இதுவரை விழா கொண்டாடியது கிடையாது. ராஜராஜ சோழனை விட பல நாடுகளை வென்று, பல நாடுகளிலும் பல புகழை பரப்பி, திறம்பட ஆட்சி செய்தவர் அவரது மகன் ராஜேந்திர சோழன் தான். ஆனால் அவரை கூட யாரும் நினைவில் வைத்துக் கொள்ளவில்லை.

ராஜராஜ சோழன் சதய விழா :

ஆனால் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் மட்டும் ஆண்டுதோறும் சதய விழாவாக அரசு சார்பிலேயே தஞ்சையில் கொண்டாடப்பட்டு வருகிறது. 2023ம் ஆண்டு அக்டோபர் 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் ராஜராஜ சோழனின் 1058வது சதய விழா கொண்டாடப்படுகிறது. ராஜராஜ சோழன் பிறந்தது ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் என அவரது மெய்கீர்த்தியில் குறிப்பிடப்படுகிறது. அவரது பிறந்தநாள் மட்டும் ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் இன்னும் மக்களால் கொண்டாடப்பட்டு வருவது ஆச்சரியமான ஒன்றாகும். ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் கூட ராஜராஜ சோழனின் புகழ் மட்டும் அழியாமல் இருப்பதற்கு அவரது ஜாதக அமைப்பே காரணம் என சொல்லப்படுகிறது.

​ராஜராஜ சோழனின் அழியாத புகழுக்கு காரணம் :

சூரியன் நீச்சம் பெற்று இருந்தாலும் சுக்கிரம், குரு போன்ற சுப கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலோ, சுப கிரகங்களின் பலமான பார்வை சூரியனை பார்த்தாலோ ராஜபோக வாழ்க்கை, நீங்காத புகழ் ஏற்படும். பொதுவாக ஒருவருடைய புகழ் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவரின் ஜாதகத்தில் மூன்றாம் இடத்தை ஆராய்ந்தால் போது. காலத்தால் அழியாத புகழை தீர்மானிக்கக் கூடியது இந்த மூன்றாவது இடம் தான். மூன்றாம் இடம் வலுத்திருந்தால் ஒருவருடைய புகழ் அவரது வாழ்நாளுக்குள் முடிந்து விடுமா? அல்லது காலம் கடந்தும் நிலைத்து நிற்குமா? என்பதை கணித்து சொல்லி விட முடியும்.

ராஜராஜ சோழனின் ஜாதகம் :

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் உள்ள கல்வெட்டி குறிப்புகளின் படி, ராஜராஜ சோழன் பிறந்த போது இருந்து கிரக நிலைகளின் அமைப்பின் படி, துலாம் ராசியில் சூரியன் நீச்சம் பெற்றுள், 2ம் இடமான கும்பத்தில் சந்திரனும், துலாம் ராசியில் செவ்வாய் தோஷத்துடனும், விருச்சிகத்தில் புதனும், சிம்மத்தில் குரு பலம் பெற்றும், கன்னியில் சுக்கிரன் நீச்சம் பெற்றும், லக்னத்தில் ராகுவும், 7ம் வீட்டில் கேதுவும் இருந்துள்ளன. ஆனால் ராஜராஜ சோழன் பிறந்த நேரம் எது என தெரியாததால் அவரது ஜாதகத்தை முழுவதுமாக இதுவரை எவராலும் கணிக்க முடியாததாக உள்ளது.

புகழ் நிலைக்க இதுதான் காரணம் :

மூன்றாம் வீட்டின் அதிபதி வலுப்பெற்றும், அவர்களுடன் குரு-சுக்கிர இணைந்து காணப்பட்டால் அவர்களின் புகழ் என்றென்றும் அழியாமல் நிலைபெற்றிருக்கும். தான் உயிரோடு இல்லாத போதும் அவர் புகழுடன் வாழக் கூடிய தன்மை ஏற்படும். இப்படிப்பட்ட ஜாதக அமைப்பில் பிறந்தவர் என்பதால் தான் பொன்னியின் செல்வன், ராஜராஜ சோழன் என புகழப்படும் அருள்மொழி வர்மனின் புகழ் இன்றும் நிலைத்து நிற்கிறது என சொல்லப்படுகிறது. எவர் ஒருவருக்கு மூன்றாம் பாவகம் சுபத்துவமாகவும், மூன்றாம் பாவகாதிபதி சுப தன்மையுடனும் குரு சுக்கிர பார்வையுடனும் இருந்தால் அவர்களின் பெயர், திறமை என ஏதாவது ஒரு வகையில் காலத்திற்கும் அழியாத வகையால், எந்த காலத்திலும் நினைவில் வைத்து, அவர்களே போற்றக் கூடியதாக இருக்கும். ராஜராஜ சோழன் மட்டுமல்ல புலவர்கள், நாயன்மார்கள் உள்ளிட்டோரும் அவர்களின் பெயர் தெரியாவிட்டாலும் அவர்கள் எழுதிய பாடலால் நினைத்து பார்க்கப்பட்டு, புகழப்படுவது இந்த ஜாதக அமைப்பின் காரணமாக தான்.

436 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.