முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்துவரும் மழையால் நீர் வரத்து அதிகமாகி வட்டுவா கல் ஊடாக நந்திக்கடல் மேவிப்பாய ஆரம்பித்துள்ளது.
கரைதுறைப்பற்று உட்பட முறிப்புக்குளம் வான்பாய்கின்ற நிலையில், முத்தையன் கட்டுக்குளத்தின் கீழான பேராற்று நீரும் நந்திக்கடலை சென்றடைந்து கொண்டிருப்பதால் நீர்மட்டம் உயர்வடைந்துமுகத்துவாரம் உடைப்பெடுத்து முல்லைத்தீவுப் பெருங்கடலுடன் இணைந்துள்ளது.
கடந்த காலங்களில் நந்திக் கடல் நீர்மட்டம் உயர்வடைந்தால் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையமூடாக கமக்கார அமைப்பினருடன் கூட்டம் நடத்தப்பட்டு பூசை வழிபாடுகளுடன் முகத்துவாரம் வெட் டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.