எழிலன்
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் விடுதலைப்புலிகளின் இராணுவத் தளவாடங்களைத் தேடி பொலிஸார் மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கை தோல்வியில் முடிந்துள்ளது. இதையடுத்து தோண்டப்பட்ட கிடங்குகளை மூடிவிடுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். போரின் இறுதிநாள்களில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரையில் விடுதலைப் புலிகளால் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டதாக நம்பப்படும் இடம் ஒன்றினை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தோண்டும் நடவடிக்கை நேற்றுமுன்தினம் முதல் முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு பொலிஸ் புலனாய்வாளர்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவல்களுக்கு அமையவே இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. கடந்த இரண்டு நாள்களாக எந்தவிதமான தடயப் பொருள்களும் மீட்கப்படாததையடுத்தே அகழ்வுப் பணிகள் கைவிடப்பட்டன. (எ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.