எழிலன்
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தற்போது அகழப்பட்டகை கீழ்ப் பகுதியிலும் புதைகுழி நீண்டு செல்லலாம் என்றும் ஊகிக்கப்படுகின்றது. இது தொடர்பான தீர்க்கமான கலந்துரையாடலொன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இன்று இடம்பெறவுள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் இதுவரை 39 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. - இதைவிட விடுதலைப்புலிகளுடையதாக இருக்கலாம் என்று சந்தேகப்படும் ஆடைகள், துப்பாக்கி ரவைகள், பேனா, சயனைட் குப்பிகள். தகடுகள் என்பனவும் இந்த மனிதப் புதைகுழியில் இருந்து சான்றுப் பொருள்களாகக் கிடைத்துள்ளன.
அண்மையில் ஸ்கான் இயந்திரத்தின் உதவியுடன் அந்தப் பகுதியில் செய்யப்பட்ட ஆய்வின் அடிப்படையிலேயே, இந்தப் புதைகுழி இன்னும் மிகநீளமானதாகவும் மிக அகலமானதாகவும் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. குறிப்பாக வீதியின் கீழ்ப் பகுதியிலும் புதைகுழி இருக்கும் என்று நம்பப்படுகின்றது.
இந்த நிலையில், இது தொடர்பான கலந்துரையாடலொன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இன்று இடம் பெறவுள்ளது. தொடர்ச்சியான அகழ்வுப் பணிகள் தொடர்பில் இன்றைய கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்படலாம். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.