எழிலன்
புதுக்குடியிருப்பில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 29 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்று கூறப்படுகின்றது.
சந்தேகநபரிடம் இருந்து 16 எரிவாயு சிலிண்டர்கள், ஒரு நீர் இறைக்கும் மின் மோட்டர், ஒரு சைக்கிள், கதிரைகள், தங்கச் சங்கிலி, வயர் சுருள்கள் எனப் பல பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
முதியவர்கள் உள்ள வீடுகளை இலக்கு வைத்தே இவர் திருட்டுகளை மேற்கொண்டுள்ளார் என்றும், சந்தேகநபர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் எனவும் புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.