ஆதவன்
வீதியில் தேங்கும் மிதமிஞ்சிய வெள்ளத்தின் காரணமாக, முல்லைத்தீவு - மந்துவில் அரசரத்தினம் வித்தியாலயத்தில் கல்விபயிலும் மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்புப் பிரதேச சபைக்குச் சொந்தமான மந்துவில் கிராமத்தினுடைய வீதிகள் மீள்குடியேற்றத்தின் பின்னர் 14ஆண்டுகளாகத் திருத்தப்படவில்லை என்று பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுதொடர்பாக வீதி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளரிடம் கேட்ட போது, புதுக்குடியிருப்பு நகரப் பகுதியில்வெள்ளமேலாண்மை வேலைத்திட்டங்களுக்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்தில் சிறப்பு வேலைத்திட்ட மொன்று முன்னெடுக்கப்படும் - என்றார். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.