[ஆதவன்]
9 வயதுச் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய் யப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு மாவட் டத்தில் நடந்துள்ளது.
சிறுமியின் தகவலுக்கு அமைய சிறுமி யின் தாய் கடந்த 4ஆம் திகதி செய்த பொலிஸ் முறைப்பாட்டின் அடிப்படை யில் சிறுமியின் தந்தை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள் ளார்.
சிறுமி மருத்துவப் பரிசோதனைகளுக் காக மருத்துவமனையில் சேர்க்கப்பட் டுள்ளார். சந்தேகநபர் நேற்றுமுன்தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முற் படுத்தப்பட்டு எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட் டுள்ளார்.
இந்தச்சம்பவம் தொடர்பான விசாரணை கள் ஐயன்கன்குளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.