கல்முனை யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்புக்கு தேவையான கூடாரம்(Tent) இனை அமைப்பின் உறுப்பினர் ஏ.எம்.பைசாலினால் அன்பளிப்பு செய்யும் நிகழ்வு கல்முனையில் (19.12.2023) செவ்வாய்கிழமை இடம்பெற்றது. கல்முனை யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பின் இவ் உயரிய சேவைக்கு ஆதரவு வழங்கி, ஊக்குவிக்கும் நோக்கில் வழங்கப்பட்ட இந்த கூடாரம் (Tent) இனை உறுப்பினர் ஏ.எம்.பைசால், ஜனாஸா நலன்புரி அமைப்பின் தலைவர் எம்.எம்.மர்சூக் மற்றும் உப தலைவர் எஸ்.அஷ்ரப்கான் ஆகியோரிடம் கையளித்தார். இங்கு ஸஹ்றியன் 93/96 வெல்பெயார் அமைப்பின் தலைவர் ஏ.எம்.அஸ்வர் மற்றும் ஜனாஸா நலன்புரி அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். குறித்த அன்பளிப்பை செய்த ஏ.எம்.பைசாலுக்கு கல்முனை யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பினர் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.