புதியவன்.
மண்முனைப்பற்று பிரதேசத்தில் காணி உறுதிப்பத்திரம் அற்றவர்களுக்கான காணி உறுதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதமவிருந்தினராக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு முதற்கட்டமாக 19 பயனாளிகளுக்கான காணி உறுதிப்பத்திரங்களை வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூபாலபிள்ளை பிரசாந்தன், மண்முனைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.