[ஆதவன்]
செங்கடல் பகுதியில் கனேடிய, அமெரிக்கக் கடற்படைகள் இணைந்து கூட்டுக் கண்காணிப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும் என்றும், அல்லாவிடின் செங்கடல் பகுதியால் செல்லும் கப்பல்கள் இலக்குவைத்துத் தாக்கப்படும் எனவும் அறிவித்த ஹவுத்தி அண்மைக்காலமாகத் தாக்கு தல்களையும் தீவிரப்படுத்தியிருந்தது.
இதையடுத்து கனடாவின் உளவுத்தகவல்கள் மற்றும் இராணுவ உதவிகளுடன் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இணைந்து கடந்த இரண்டு நாள்களாக யேமனில் உள்ள ஹவுத்திகளின் நிலைகள் மீது கடும் வான் தாக்குதல்களை நடத்தின.
இந்தத் தாக்குதல்களால் ஹவுத்திகளின் நிலைகள் பல அழிக்கப்பட்டுள்ளன என்று அமெரிக்கா தெரிவித்திருந்த நிலையில், சேதாரங்கள் தொடர்பில் ஹவுத்தியும் ஒப்புக்கொண்டுள்ளது. 'யூத மனோநிலையின் இந்தக் கூட்டுத் தாக்குதலுக்கு விரைவாகவே பதிலடி கொடுக்கப்படும்' என்று ஹவுத்தி எச்சரித்திருந்த நிலையில், கப்பல்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு செங்கடலில் அமெரிக்காவும் கனடாவும் தற்போது கடும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.