முன்பள்ளியில் இருந்து தரம் 01க்கு செல்லவிருக்கும் மாணவர்களின் விடுகை மற்றும் புதிய முன்பள்ளி மாணவர்களை வரவேற்கும் நிகழ்வுகள் அன்மையில் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஐ.எம். சைபுதீன் தலைமையில் முன்பள்ளி ஆசிரியைகளின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக "றியோ மார்க்கட்டிங்" நிறுவனத்தின் முகாமைத்துவப்பணிப்பாளர் றிஸ்மீர் நைனா முஹம்மது சார்பில் அந்நிறுவனத்தின் "கிவி" உற்பத்திப்பிரிவின் முகாமையாளர் றுமைஸ் கலந்து கொண்டார்.
இங்கு பாடசாலையின் பிரதி அதிபர் டீ.கே.எம். சிராஜ் மற்றும் உதவி அதிபர் எம்.ஏ.எம். சிராஜ் ஆகியோருடன் சாய்ந்தமருது பிரதேச செயலக முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.எஸ்.சிறீன், கல்முனை வடக்கு பிரதேச செயகல முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம். ஆயிஷா, ஓய்வு பெற்ற ஆசிரியர் எம்.ஐ.எம். முபாறக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகளுடன் அதிதிகளுக்கான நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.