(யோகி)
பால்நிலை தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி (02) இன்று மாவட்டச்செயலகத்தில் மாவட்டச்செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலமையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் மருத்துவர்கள் "அரச அதிகாரிகள் சிறுவர்"நன்நடத்தை உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர் இக்கலந்துரையாடலில் தற்பொழுது கிளிநொச்சி மாவட்டத்தில் பால்,நிலை தொடர்பாக தற்பொழுது ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மற்றும் மாற்றங்கள் என்பது தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்றன.
இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தில் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் 2022ம் ஆண்டை விட 2023ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான சிறு குற்றம் அதிகரித்து காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கெதிரான வன்முறைகள் (2022 - 175)ஆகவும் (2023 - 863)ஆகவும் அதிகரித்து,காணப்படுவதாகவும் மற்றும் குடும்ப வன்முறைகள் காரணமாக பல பெண்கள் மற்றும் சிறுவர்கள் அதிகமாக,பாதிக்கபடுவதாகவும் இதற்கான மாற்று நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மற்றும் போசாகற்ற நலிவடைந்த சிறுவர்கள் அவர்களுக்கான போசாக்கு மாத்திரைகளை விட போசாக்கான உணவுகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளபடவேண்டும் எனவும் சிறுவர்கள் எதிர்நோக்கும் விடையங்கள் தொடர்பாக காவல்துறை மேற்கொள்ளபடவேண்டும் எனவும் கலந்துலையாடல் நடைபெற்றது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.