(ஆதவன்)
கிளிநொச்சி - ஸ்கந்தபுரம் கிராமத்துக்கு வருகின்ற குரங்குகளை விரட்டுவதற்கு வாயுத் துப்பாக்கிகளை வழங்குமாறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்ட விவசாயக் குழுக் கூட்டங்களில் கடந்த 14 ஆண்டுகளாகக் குரங்குகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்த போதும் அவர்கள் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஸ்கந்தபுரத்தில், குரங்குகளால் ஏற்பட்டு வருகின்ற பெருமளவு பயிர் அழிவுகளைக் கட்டுப்படுத்துவதற்கு விவசாயிகளுக்கு 4 வாயு துப்பாக்கிகளைப் பெற்றுக்கொடுப்பதாக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற கரைச்சிப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.