உமையாள்புரம் மக்கள் விசனம்
(ஆதவன்)
கிளிநொச்சி, உமையாள்புரத்தில் கொட்டப்படும் கழிவுகளால் அங்கு வாழும் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுகாதாரச் சீர்கேடுகளை எதிர்கொண்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.
கிளிநொச்சி, பரந்தன் நகரங்களின் கழிவுகள் உமையாள்புரத்தின் தொடரூந்து பாதையைக் கடந்து சுட்டதீவுப் பகுதியில் கொட்டப்படுகின்றன. அதனால் அந்த வீதி சேறும், சகதியுமாகக் காணப்படுகின்றது.
அங்கு கொட்டப்படும் கழிவுகளால் கடும் துர்நாற்றம் எழுகின்றது. பாடசாலை மற்றும் குடியிருப்புகளுக்குள் துர்நாற்றம் வீசுவதால் மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதுள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரி கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.