தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா இன்று.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா இன்று.

(புதியவன்)
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா இன்று (2024.02.10) ஆம் திகதி பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின்  விழா மண்டபத்தில்  ஆரம்பமானது.
 
இன்றைய  இந்நிகழ்வுகள் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரின் நெறிப்படுத்தலிலும் பல்கலைக்கழக வேந்தர் அரசதலைவர் சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபாவின் தலைமையிலும்  இடம்பெற்றது.
 
பட்டமளிப்பு விழாவின் முதல் அமர்வின் சிறப்பு பேச்சாளராக அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் புதிய நிறைவேற்றுப் பணிப்பாளர்  கலாநிதி பெட்ரிக் மெக்னமாரா  கலந்து கொண்டு உரையாற்றினார்.
 
முதலாம் நாளின் முதலாவது அமர்வில் கலை கலாசார பீடத்தைச் சேர்ந்த 342 பட்டதாரிகளும் இரண்டாவது அமர்வில் இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தைச் சேர்ந்த 355 பட்டதாரிகளும் மூன்றாவது அமர்வில் பிரயோக விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த 430 பட்டதாரிகளும் பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.
 
இன்றைய தினத்தில் கலை கலாச்சார பீடத்திலிரிந்து (2016/2017) ஆம் கல்வி ஆண்டில் அரசியல் மற்றும் சமாதான கற்கைதுறையில் சிறந்த மாணவருக்கான கலாநிதி எம். எல்.ஏ. காதர் விருதை முகம்மது அமீர் மர்யம் பெற்றுக்கொண்டார். அத்துடன் 
2016/2017 ஆம் கல்வி ஆண்டில் தமிழ் துறையில் சிறந்த மாணவருக்கான பேராசிரியர் கைலாசபதி ஞாபகார்த்த விருதை முஹம்மட் அலி றீஷா நூர் சுவீகரித்தார்.
 
2016/2017 ஆம் கல்வி ஆண்டில் ஹிந்து கலாசார துறையில் சிறந்த மாணவருக்கான புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை ஞாபகார்த்த விருதை வனிதா உதயகுமார் பெற்றுக்கொண்டார்.

இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்த்தின் சார்பில்  
 இஸ்லாமிய சிந்தனைகள் மற்றும் நாகரிகம் என்ற துறையில் சிறந்த மாணவருக்கான கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி ஞாபகார்த்த விருது நூறுல் ஸிபா ஜாபீறுக்கு வழங்கப்பட்டது. 
 
 இஸ்லாமிய வைப்பகம் மற்றும் நிதி துறையில் சிறந்த மாணவருக்கான இஸ்மாயில் டீன் மரிக்கார் விருது செயினுல் ஆப்தீன் சாஜித் பெற்றுக்கொண்டார்.
 
மூன்றாவது அமர்வில் பிரயோக விஞ்ஞான பீடம்இ பொறியியல் பீடம் மற்றும் தொழில்நுட்பவியல் பீட மாணவர்களுக்கான பட்டங்கள் வழங்கப்பட்டன.
 விழாவின் மூன்றாவது அமர்வில் சிறப்பு பேச்சாளராக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தவிசாளர் மூ பேராசிரியர் சந்தன பி உடவத்த கலந்து கொண்டு உரையாற்றினார்.
 
குறித்த அமர்வின்போது தொழில்நுட்பவியல் பீடத்தின் சிபார்சின் கீழ் கலாநிதி திலகரத்ன ஆராச்சிகே பியசிறி அவர்கள்  கலாநிதிப்பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.

பிரயோக விஞ்ஞான பீடத்திலிருந்து 
 விஞ்ஞானத்தில் சிறந்த மாணவருக்கான கலாநிதி எம். எச்.எம். அஷ்ரப் ஞாபகார்த்த விருதை டினூபமா சமதி ஹேவாகே பெற்றுக்கொண்டார்.
 
 இரசாயன துறையில் சிறந்த மாணவருக்கான பேராசிரியர் சுல்தான் பாவா ஞாபகார்த்த விருது வெடநாயக்க பிலிப்புல்லைய உமேஷா சுபுன்சாரி விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்டது.
 
பொறியியல் பீடத்தில் 
பொறியியல் பீடத்தில் சிறந்த மாணவருக்கான விருதை முகம்மது நுஷான் பாத்திமா நிகப்லா சுவீகரித்துக்கொண்டார்.
 
 சிவில் இன்ஜினியரிங் துறையில் சிறந்த மாணவருக்கான விருது முகம்மது நுஷான் பாத்திமா நிகப்லாவுக்கே கிடைத்தது.  

எலக்ரிகல் அண்ட் எலக்ட்ரோனிக் இன்ஜினியரிங் துறையில் சிறந்த மாணவருக்கான விருது திசாநாயக்க முதியன்செலாகே சத்துமினி சாரிக்க திசாநாயக பெற்றுக்கொண்டார்.
 
 மெகானிகல் இன்ஜினியரிங் துறையில் சிறந்த மாணவருக்கான விருது ஷியாட் முபீஸ் சாஹிபுக்கு வழங்கப்பட்டது.
 
பட்டமளிப்பு விழாவின் நேரடியாக ஒலி ஒளிபரப்பு பல்கலைக்கழக ஊடகப்பிரிவின் நேரடி கண்காணிப்பில் இதற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட   என்ற இணையத்தள பக்கத்தினூடாக ஒலி ஒளிபரப்புச் செய்யப்பட்டது சிறப்பம்சமாகும்.

நாளை (2024.02.11) நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது அமர்வுகளில் வர்த்தக முகாமைத்துவ பீடம் மற்றும் வெளிவாரி பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.(ப) 

#uthayannews #newsupdate #todaybreaking #newsupdate #breaking

113 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.