(செல்வன்)
வடக்கு, கிழக்கு மறுவாழ்வு அமைப்பினர் 'கல்விக்கு கைகொடுப்போம்' என்னும் தொனிப்பொருளில் பொருளாதாரம் நலிவுற்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிவருகின்றனர்.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட, கற்சிலைமடுப் பகுதியில் தெரிவுசெய்யப்பட்ட 100 மாணவர்களுக்கு வடக்கு, கிழக்கு மறுவாழ்வு அமைப்பினரால் பெப்ரவரி (10) நேற்று கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வடக்கு, கிழக்கு மறுவாழ்வு அமைப்பின் செயற்பாட்டாளரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான சந்திரலிங்கம் சுகிர்தனின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தெரிவுசெய்யப்பட்ட 100மாணவர்களுக்கு புத்தகப்பைகளும், குறிப்பேடுகளும் வழங்கிவைக்கப்பட்டிருந்தன.
இந் நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான துரைராசா ரவிகரன், வடக்கு, கிழக்கு மறுவாழ்வு அமைப்பின் செயற்பாட்டாளர்கள், இலங்கைத்தமிழரசுக்கட்சியின் ஒட்டுசுட்டான் பிரதேசசெயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.