(செல்வன்)
"நம்பிக்கை கொடுப்போம் நம்பிக்கை கொடுப்போம்" எனும் மகுட வாசகத்துடன் மக்களுக்காக பல்வேறு சமூக நலப்பணிகளை ஆற்றி வரும் ஏர் நிலம் தொண்டமைப்பின் நான்காவது ஆண்டு பொங்கல் விழாவும் உழைப்போர் மதிப்பளிப்பு நிகழ்வும் "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" எனும் தொனிப்பொருளில் இன்று(11) கற்சிலைமடு மாவீரன் பண்டார வன்னியன் சிலை வளாகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.
ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய அதிபர் சின்னப்பா நாகேந்திரராசா தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு பாரம்பரிய பொங்கல் நிகழ்வும் அதனை தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இறுதியாக விவசாய துறையின் முதுசமாக திகழும் கற்சிலைமடு ஒட்டுசுட்டான் பகுதியை சேர்ந்த திரு. திருமதி கிட்டிணப்பிள்ளை இராசமணி , பனந்தொழில் வல்லுனராக சிலையடி கற்சிலைமடுவைச் சேர்ந்த திரு. திருமதி சகுந்தர்ராஜா சிவதலம் , கைம்பணி துறையின் முதுசமாக திகழும் கற்சிலைமடு பகுதியை சேர்ந்த திருமதி விஜயரத்தினம் சுசிலாதேவி ,விவசாய துறையின் கனேசபுரம் பகுதியை சேர்ந்த திரு. திருமதி நாகராசா சோதிப்பிள்ளை, முத்துவிநாயகபுரம் இரண்டாம் கண்டம் பகுதியை சேர்ந்த திரு. திருமதி சிவராஜா கலைவாணி , பண்டாரவன்னி பகுதியை சேர்ந்த திரு. திருமதி கந்தசாமி இராசமணி பேராறு பகுதியை சேர்ந்த திரு. திருமதி கிருஸ்னசாமி ஜானகி , மண்ணகண்டல் பகுதியை சேர்ந்த திரு. திருமதி இராசையா பாக்கியம் , கூழாமுறிப்பு பகுதியை சேர்ந்த திரு. திருமதி சின்னராசா மேரியம்மா, பழம்பாசி பகுதியை சேர்ந்த திரு. திருமதி பத்மநாதன் விமலா ஆகியோர் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து நினைவு கேடயங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.
நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட திட்டமிடல் மருதத்துவ அதிகாரி கலாநிதி கைலாயநாதன் சுதர்சன் ஏர்நிலம் அமைப்பின் ஆலோசகர் கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி அதிபர் இ.சூரியகுமாரி சட்டத்தரணி கனகரத்தினம் பார்த்தீபன் ஒட்டுசுட்டான் கமநல சேவை நிலைய குழுத்தலைவர் இ.வேதநாதன் ஒட்டுசுட்டான் மற்றும் முத்து விநாயகபுரம் கிராம அலுவலர் லலிதா நிவேகாந்தன் ஆயுள்வேத வைத்தியர் நாகமணி வன்னியசிங்கம் மற்றும் ஏர் நிலம் அமைப்பினை சாந்தவர்கள் கலைஞர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.