ஆதவன்
தலைமன்னாரில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதிகோரி மன்னார் நீதிவான் நீதிமன்ற வளாகத்துக்கு முன்பாக நேற்றுப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
சிறுமியின் படுகொலைக்குத் தாமதமின்றி நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரியும், விசேட நீதிபதிகள் அடங்கிய குழு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
10 வயதான சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில், சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட தென்னந் தோட்டத்தில் பணிபுரிந்த நபர் சந்தேக நபராகக் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவரை 48 மணிநேரம் காவல் துறை காவலில் வைத்து விசாரிக்க கடந்த 17ஆம் திகதி நீதிமன்றம் அனுமதி வழங்கியது. சந்தேக நபர் நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இந்த நிலையிலேயே நீதிமன்றத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது. (எ )
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.