(ஆதவன்)
மட்டக்களப்பு தொடரூந்து கடவைக் காப்பாளர்கள் தொடர் கவனவீர்ப்பை நேற்று ஆரம்பித்துள்ளனர்.
மட்டக்களப்பு தொடரூந்து நிலையத்துக்கு முன்பாக இந்தக் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 24 தொடரூந்து கடவைகளில் கடமையாற்றும் தொடரூந்து கடவைக் காப்பாளர்கள், தமது சேவையை நிரந்தரமாக்கக் கோரி கவனவீர்ப்பை முன்னெடுத்தனர்.
சுமார் 11 வருடங்களாக நிரந்தர நியமனமின்றி 250 ரூபா நாள் சம்பளத்துக்குப் பணி புரியும் தம்மை கடமையிலிருந்து நீக்கி, ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் உள்வாங்கப்பட்டவர்களைச் சேர்த்துக்கொள்ளவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டதாக, போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.