எழிலன்
கூழாமுறிப்பில் மாணவர்களுக்கான இலவச கற்றல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கூழாமுறிப்பு பகுதியில் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கோடு விஜயாலயன் அறக்கட்டளையால் இன்றைய தினம் மாணவர்களுக்கான இலவச மாலை நேர கல்வி நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
முள்ளியவளையைச் சேர்ந்த கனடா நாட்டின் பொலிஸ் அதிகாரியாகக் கடமையாற்றி கடந்த 2022 ஆம் ஆண்டு கனடா நாட்டில் விபத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரியான விஜயாலயன், நினைவாக அவர்களுடைய உறவினர்களால் விஜயாலயன் அறக்கட்டளை எனும் பெயரிலே அனைவருக்கும் கல்வி எனும் தொனிப்பொருளிலே ஆரம்பிக்கப்பட்டுள்ள அமைப்பின் ஊடாக பல்வேறு இடங்களிலும் மாணவர்களுக்கான கற்றலுக்கான வசதிகள், கல்விச் செயற்பாடுகளுக்கான கற்கை நிலையங்கள் என்பன ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன
இதன் ஒரு அங்கமாக இன்று கூழாமுறிப்பு பகுதியில் மாணவர்களுக்கான இலவச கற்றல் நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
விஜயாலயன் அறக்கட்டளையினுடைய முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் முன்னாள் கரைத்துறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கூழாமுறிப்பு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அதிபர் க.சபாஜிதன் கல்வி நிலைய பெயர்ப்பலகையைத் திறந்து வைத்ததைத் தொடர்ந்து கூழாமுறிப்பு பங்குத்தந்தை ம.கான்ஸ்போவர் கல்வி நிலையத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கூழாமுறிப்பு பங்குத்தந்தை ம.கான்ஸ்போவர், கூழாமுறிப்பு கிராம அலுவலர் நா.இரஞ்சிதகுமார், கூழாமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் க.சபாஜிதன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தி.மதன்ராஜ் விஜயாலயன் அறக்கட்டளையின் பார்த்தீபன், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.