செல்வன்
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் நகரில் பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் இணைந்து மோப்ப நாய்கள் சகிதம் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
நாட்டில் போதைப்பொருள்கள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் சிறப்பு நடவடிக்கையான 'யுக்திய'வின் ஒரு பகுதியாகவே ஒட்டுசுட்டானில் சிறப்பு போக்குவரத்து சோதனை நடவடிக்கை இன்றையதினம் காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிஸார், சிறப்பு அதிரடிப் படையினர் மோப்ப நாய் சகிதம் வீதியால் செல்லும் அனைத்து வாகனங்களிலும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.