யோகி.
வட்டக்கச்சி கட்சன் வீதி அமைந்துள்ள விவசாய பண்ணையின் பின்புறம் மற்றும் அயல் பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லை தினமும் அதிகரித்து வருவதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
நேற்றுமுன்தினம்(16)இரவு வட்டக்கச்சி விவசாய பண்ணைக்கு அருகில் தென்னை செய்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரின் தென்னையை முற்றாக அளித்த துவசம் செய்துள்ளதாகவும் இப்பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் தொடர்ச்சியாக அதிகரித்து காணப்படுவதாகவும் இன்று திங்கட்கிழமை (18) பன்னங்கண்டி வட்டக்கச்சி பண்ணைக்கு இடைப்பட்ட காட்டுகளின் வீதி ஓரமாக யானை ஒன்று நிற்பதை அப்பகுமக்கள் அவதானித்ததாகக் கூறியுள்ளனர்.
எனவே குறித்த வீதியினூடாக பயணிக்கும் பொதுமக்கள் அதிகாலை மற்றும் இரவு வேலைகளில் மிகுந்த அச்சத்துடன் பயணிப்பதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் மிகவிரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள்தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.