(ஆதவன்)
அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக முல்லைத்தீவு, கேப்பாபிலவில் குடிதண்ணீரின்றித் தவிக்கும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது என்று கிராமமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்; தற்போது கடும் வறட்சியான சூழல் நிலவுவதன் காரணமாக மாதிரிக் கிராமத்திலுள்ள கிணறுகளில் நீர் வற்றிச் செல்கின்றது.
இராணுவத்தினரின் பிடியிலுள்ள இங்குள்ள மக்கள் காணிகளை விடுவித்தால் எமது காணிகளிலுள்ள கிணறுகளிலிருந்து குடிதண்ணீரைப் பெற்றுக்கொள்ள முடியும்.
எமது சொந்தக் காணிகளை விடுவிப்பதுடன் எமது குடிதண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணுவதற்கும் உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - என்றனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.