செல்வன்.
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் கணவனை பிரிந்து வாழும் நிலையில் தவறான உறவின் மூலம் கர்பமடைந்துள்ள நிலையில் கடந்த 15ஆம் திகதி குழந்தையை பெற்றெடுத்த நிலையில் பிள்ளையை கொலை செய்துள்ள குறித்த பெண் கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருந்த குழந்தையின் தாயாரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலும் இருவரை கைது செய்துள்ளனர்.
குழந்தையை குறித்த பெண்ணின் வீட்டில் பிரசவித்து பொலித்தீன் பையினால் சுற்றப்பட்டு கொண்டு சென்று புளியம்பொக்கணை பெரியகுளம் பகுதியில் எரித்ததாகவும் குறித்த பெண்ணுடன் தொடர்பு சந்தேகிக்கப்படும் பாஸ்ரர் ஒருவர் குழந்தையை எரிப்பதற்கு உதவி புரிந்துள்ளதாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதிக்கு இன்றையதினம் (19) சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் குறித்த சம்பவ இடத்தினை பார்வையிட்ட போது, குழந்தையை கொண்டு சென்று எரித்ததாக கூறப்படும் பகுதியில் இருந்து சில தடயப்பொருட்களை புதுக்குடியிருப்பு பொலிஸார் மீட்டுள்ளதாக நீதிபதியிடம் புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து தடய பொருட்களை இன்றையதினம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணும், பெண்ணின் தாயாரும், பாஸ்ரர் உள்ளிட்ட மூவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பெண் (வயது-29) விசுவமடு இளங்கோபுரத்திலுள்ள சிவில் பாதுகாப்பு பணிமனையில் பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.