வரலாற்றில் இன்று – 21.03.2024
வரலாற்றில் இன்று – 21.03.2024

மார்ச் 21  கிரிகோரியன் ஆண்டின் 80 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 81 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 285 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

630 – உரோமைப் பேரரசர் எராக்கிளியசு கிறித்தவப் புனிதச் சின்னமான உண்மையான சிலுவையை எருசலேமிற்கு மீளக் கையளித்தார்.
1152 – பிரெஞ்சு மன்னர் ஏழாம் லூயி, அரசி எலனோர் ஆகியோரின் திருமணம் செல்லாமல் ஆக்கப்பட்டது.
1188 – அண்டோக்கு யப்பான் பேரரசராகப் பதவியேற்றார்.
1556 – கண்டர்பரி பேராயர் தாமஸ் கிரான்மர் ஆக்சுபோர்டு நகரில் எரியூட்டிக் கொல்லப்பட்டார்.
1788 – அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் நியூ ஓர்லென்ஸ் நகரில் நிகழ்ந்த பெரும் தீயினால் நகரின் பெரும் பகுதி அழிந்தது.
1800 – உரோம் நகரில் இடம்பெற்ற கலகங்களை அடுத்து கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர்கள் நகரை விட்டு விரட்டப்பட்டதை அடுத்து, வெனிசு நகரில் ஏழாம் பயசு திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
1801 – பிரித்தானியா மற்றும் பிரெஞ்சுப் படைகளுக்கிடையில் எகிப்தின் அலெக்சாந்திரியா நகரில் போர் இடம்பெற்றது.
1844 – பகாய் நாள்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் படி இந்நாள் முதலாம் ஆண்டு முதலாம் நாள் ஆகும். ஆண்டுதோறும் இந்நாள் பகாய் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது.
1871 – ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க் செருமானியப் பேரரசின் முதலாவது அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1913 – அமெரிக்காவின் ஒகைய்யோவில் டேட்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளம் காரணமாக 360 பேர் உயிரிழந்தனர், 20,000 வீடுகள் அழிந்தன.
1917 – டானிசு மேற்கிந்தியத் தீவுகள் கன்னித் தீவுகள் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1919 – அங்கேரிய சோவியத் குடியரசு நிறுவப்பட்டது. உருசியாவில் நிகழ்ந்த அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் ஐரோப்பாவில் உருவான முதலாவது பொதுவுடைமை அரசு இதுவாகும்.
1921 – கம்யூனிசப் போரினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை ஈடு செய்ய புதிய பொருளாதாரக் கொள்கையை போல்செவிக் கட்சி நடைமுறைப்படுத்தியது.
1925 – அமெரிக்காவின் டென்னிசி மாநிலத்தில் மனிதக் கூர்ப்பு பற்றிய கல்வி தடை செய்யப்பட்டது.
1935 – பாரசீக நாட்டை ஈரான் (ஆரியரின் நாடு) என அழைக்கும்படி அதன் தலைவர் ரெசா ஷா வெளிநாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
1937 – புவேர்ட்டோ ரிக்கோவில் பொன்சு நகரில் அமெரிக்க ஆளுநரின் உத்தரவின் கீழ் காவல்துறையினர் சுட்டதில் 19 பேர் கொல்லப்பட்டனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: பர்மாவின் மண்டலை நகரை பிரித்தானியப் படையினர் விடுவித்தனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய விமானங்கள் தென்மார்க்கின் கோபனாவன் நகரில் பாடசாலை ஒன்றின் மீது குண்டுகளை வீசியதில் 125 பேர் கொல்லப்பட்டனர்.
1948 – முகமது அலி ஜின்னா உருது மட்டுமே பாக்கித்தானின் அரசு மொழியாக இருக்கும் என டாக்காவில் வைத்து அறிவித்தார்.
1960 – தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: தென்னாபிரிக்காவில் சார்ப்வில் என்ற இடத்தில் கறுப்பின தென்னாபிரிக்க ஆர்ப்பாட்டக்காரரை நோக்கி காவற்படையினர் சுட்டதில் 69 பேர் கொல்லப்பட்டனர்.
1965 – நாசா ரேஞ்சர் 9 என்ற சந்திரனுக்கான தனது ஆளில்லா விண்ணுளவியை ஏவியது.
1970 – முதலாவது பூமி நாளுக்கான அழைப்பை சான் பிரான்சிஸ்கோ நகர முதல்வர் யோசப் அலியோட்டோ விடுத்தார்.
1980 – ஆப்கானித்தானில் சோவியத் ஆக்கிரமிப்பை எதிர்த்து மாஸ்கோவில் 1980 ஒலிம்பிக் விளையாட்டுகளைப் பகிஷ்கரிப்பதாக ஐக்கிய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் அறிவித்தார்.
1984 – மணலாறு பிரதேசத்தைத் தடைவலயமாக்கி இலங்கை அரசு அங்கு வாழ்ந்து வந்த தமிழர்களை அடித்து விரட்டினர்.
1990 – 75 ஆண்டுகால தென்னாபிரிக்க ஆட்சியிலிருந்து நமீபியா விடுதலை பெற்றது.
1999 – பெர்ட்ராண்ட் பிக்கார்டு பிறையன் யோன்சு ஆகியோர் வெப்ப வாயுக் கூண்டில் உலகை வலம் வந்து சாதனை படைத்தனர்.
2000 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இசுரேலுக்கான தனது முதலாவது இறைப்பயணத்தை மேற்கொண்டார்.
2006 – டுவிட்டர் சமூக ஊடகம் உருவாக்கப்பட்டது.


பிறப்புகள்


1685 – யோகான் செபாஸ்தியன் பாக், செருமானிய இசைக்கலைஞர், இசையமைப்பாளர் (இ. 1750)
1768 – ஜோசப் ஃபூரியே, பிரான்சிய கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1830)
1807 – சைமன் காசிச்செட்டி, தமிழ் புளூட்டாக் நூலை எழுதிய ஈழத்தவர் (இ. 1860)
1866 – அந்தோனியா மவுரி, அமெரிக்க வானியலாளர் (இ. 1952)
1867 – பாண்டித்துரைத் தேவர், தமிழகத் தமிழறிஞர் (இ. 1911)
1887 – எம். என். ராய், இந்திய அரசியல்வாதி (இ. 1954)
1915 – ஜேம்ஸ் ராம்ஸ்போதம், இரண்டாம் சோல்பரிப் பிரபு, யாழ்ப்பாணம் யோகசுவாமிகளின் துறவுச் சீடர் (இ. 2004)
1916 – பிசுமில்லா கான், இந்திய செனாய் இசைக்கலைஞர் (இ. 2006)
1923 – பொள்ளாச்சி நா. மகாலிங்கம், தமிழகத் தொழிலதிபர், மக்கள் சேவையாளர் (இ. 2014)
1923 – நிர்மலா ஸ்ரீவஸ்தவா, இந்திய சமயத் தலைவர் (இ. 2011)
1927 – ஆல்ட்டன் ஆர்ப், அமெரிக்க-செருமானிய வானியலாளர் (இ. 2013)
1928 – சூரிய பகதூர் தாபா, நேபாளத்தின் 23வது பிரதமர் (இ. 2015)
1930 – கா. செ. நடராசா இலங்கை எழுத்தாளர், கவிஞர், தமிழறிஞர் (இ. 2006)
1936 – காமினி பொன்சேகா, சிங்களத் திரைப்பட நடிகர் (இ. 2004)
1939 – அலி அகமது உசேன் கான், இந்திய செனாய் இசைக்கலைஞர் (இ. 2016)
1946 – திமோதி டால்டன், உவெல்சு-ஆங்கிலேய நடிகர்
1958 – கேரி ஓல்ட்மன், ஆங்கிலேய நடிகர்
1966 – ஷோபனா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1978 – ராணி முகர்ஜி, இந்திய திரைப்பட நடிகை
1980 – ரொனால்டினோ, பிரேசில் காற்பந்து வீரர்
1991 – அந்துவான் கிரீசுமன், பிரான்சியக் காற்பந்து வீரர்


இறப்புகள்


543 – நூர்சியாவின் பெனடிக்ட், இத்தாலியப் புனிதர் (பி. 480)
1556 – தாமஸ் கிரான்மர், ஆங்கிலேய பேராயர், புனிதர் (பி. 1489)
1762 – நிகோலசு லூயிசு தெ லா கைல்லே, பிரெஞ்சு வானியலாளர், மதகுரு (பி. 1713)
1847 – மேரி அன்னிங், பிரித்தானிய தொல்பொருள் ஆய்வாளர் (பி. 1799)
1922 – ச. வே. இராமன் பிள்ளை, மலையாள எழுத்தாளர் (பி. 1858)
1998 – இராமநாதபுரம் சி. சே. முருகபூபதி, தமிழக மிருதங்கக் கலைஞர் (பி. 1914)
2008 – க. சச்சிதானந்தன், ஈழத்துத் தமிழறிஞர், கவிஞர் (பி. 1921)
2012 – யாழூர் துரை, ஈழத்து எழுத்தாளர், நாடக இயக்குனர் (பி. 1946)
2013 – சின்னுவ அச்செபே, நைஜீரிய எழுத்தாளர் (பி. 1930)
2016 – பிலிம் நியூஸ் ஆனந்தன், தமிழகப் பத்திரிகையாளர் (பி. 1928)


சிறப்பு நாள்


மர நாள் (போர்த்துகல், லெசோத்தோ)
இணக்க நாள் (ஆத்திரேலியா)
மனித உரிமைகள் நாள் (தென்னாப்பிரிக்கா)
விடுதலை நாள் (நமீபியா, தென்னாப்பிரிக்காவிடம் இருந்து 1990)
பன்னாட்டு வன நாள்
பன்னாட்டு வண்ண நாள்
அன்னையர் நாள் (அரபு நாடுகள்)
உலகக் கவிதை நாள்
சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு நாள்
உலக டவுன் நோய்க்கூட்டறிகுறி நாள்
ஈரானியப் புத்தாண்டு நாள்
சர்வதேச தடுத்து வைக்கப்பட்ட, காணாமற்போன பணியாளர்களுடன் கூட்டு ஒருமைப்பாடு நாள்
உலக பொம்மலாட்ட நாள்

261 2

2 Comments

* * * <a href="http://miterworks.com/uploads/go.php">Apple iPhone 15 Free</a> * * * hs=74e981c2c36dedb1d10a712dcd4796ab* 26-Mar-2024

tmahh1

* * * Apple iPhone 15 Free: http://miterworks.com/uploads/go.php * * * hs=74e981c2c36dedb1d10a712dcd4796ab* 26-Mar-2024

q19sch

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.