வரலாற்றில் இன்று – 22.03.2024
வரலாற்றில் இன்று – 22.03.2024

மார்ச் 22 கிரிகோரியன் ஆண்டின் 81 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 82 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 284 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

238 – முதலாம் கோர்டியனும் அவனது மகன் இரண்டாம் கோர்டியனும் உரோமைப் பேரரசர்களாக அறிவிக்கப்பட்டனர்.
1622 – அமெரிக்காவின் வர்ஜினியா மாநிலத்தில் ஜேம்ஸ்டவுன் நகரில் அல்கோன்கியான் பழங்குடிகள் 347 ஆங்கில குடியேற்றவாசிகளைப் படுகொலை செய்தனர்.
1739 – நாதிர் ஷா தில்லியைக் கைப்பற்றி நகரை சூறையாடி, மயிலாசனத்தின் நகைகளைக் கைப்பற்றினான்.
1765 – அமெரிக்கக் குடியேற்றங்களில் நேரடியாக வரிகளை அறவிடுவதற்கு ஏதுவான சட்டம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1784 – மரகத புத்தர் சிலை தாய்லாந்தில் இன்றைய இருப்பிடமான வாட் பிரசிறீ ரத்தின சசாதரத்திற்கு பெரும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
1829 – கிரேக்கத்துக்கான எல்லைகளை மூன்று வல்லரசுகளான பிரித்தானியா, பிரான்சு, உருசியா ஆகியன வரையறுத்தன.
1867 – இலங்கை தொடருந்து போக்குவரத்து வரலாற்றில் முதல் தடவையாக தொடருந்து இழுபொறி இலங்கையின் உயர் புள்ளிகளில் ஒன்றான கடுகண்ணாவையை அடைந்தது.[1]
1872 – அமெரிக்காவின் இலினொய் மாநிலம் பணிகளில் பாலினச் சமனிலை பேணப்படவேண்டும் என சட்டமியற்றியது.
1873 – புவேர்ட்டோ ரிக்கோவின் எசுப்பானிய தேசிய சபையில் அந்நாட்டில் அடிமைத் தொழிலை ஒழிக்க சட்டமியற்றப்பட்டது.
1916 – சீனாவின் கடைசிப் பேரரசர் யுவான் சிக்காய் முடிதுறந்தார். சீனக் குடியரசு உருவானது.
1920 – அசெரி, துருக்கி இராணுவத்தினர் நகர்னோ-கரபாக் வாழ் ஆர்மீனியர்களைப் படுகொலை செய்தனர்.
1939 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி லித்துவேனியாவிடம் இருந்து மெமெல் பிரதேசத்தைக் கைப்பற்றியது.
1943 – இரண்டாம் உலகப் போர்: பெலருசின் காத்தின் கிராம மக்கள் அனைவரும் நாட்சிகளால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.
1945 – அரபு நாடுகள் கூட்டமைப்பு அமைக்கப்பட்டது.
1960 – ஆர்தர் சாவ்லொவ், சார்லசு டவுன்சு ஆகியோர் சீரொளிக்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்றார்கள்.
1965 – இலங்கையில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து டட்லி சேனநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்தது.
1972 – கருத்தடைப் பொருட்களை மணமாகாதோர் வைத்திருப்பதற்கு உரிமை உண்டென ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1982 – நாசாவின் கொலம்பியா விண்ணோடம் ஏவப்பட்டது.
1992 – அல்பேனியாவில் கம்யூனிசத்தின் வீழ்ச்சி: அல்பேனிய சனநாயகக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது.
1992 – யூஎஸ்ஏர் 405 விமானம் நியூரோர்க்கின் லாகோர்தியாவில் இருந்து கிளம்பி சில நேரத்தில் விபத்துக்குள்ளாகியதில் 27 பேர் உயிரிழந்தனர்.
1995 – சோவியத் விண்வெளிவீரர் வலேரி பொல்யாக்கொவ் விண்ணில் 438 நாட்கள் கழித்துவிட்டு பூமி திரும்பினார்.
1997 – ஹேல்-பொப் வால்வெள்ளி பூமிக்குக் கிட்டவாக வந்தது.
2004 – பாலத்தீனத்தின் சுன்னி இசுலாமிய அமாசு இயக்கத்தை ஆரம்பித்தவர்களில் ஒருவரான அகமது யாசின் இசுரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
2006 – பக்தாதில் 118 நாட்களாக பணயக் கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டிருந்த கிறித்தவ அமைதிகாக்கும் அணியைச் சேர்ந்த மூவர் பிரித்தானியப் படையினரால் விடுவிக்கப்பட்டனர்.
2013 – தாய்லாந்தில் பர்மிய அகதி முகாம் ஒன்று தீப்பிடித்ததில் 37 பேர் உயிரிழந்தனர், 200 பேர் காயமடைந்தனர்.
2016 – பிரசெல்சு, வானூர்தி நிலையத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர்.
2017 – இலண்டனில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர்.


பிறப்புகள்


1394 – உலுக் பெக், பாரசீக வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1449)
1799 – பிரீட்ரிக் வில்கெல்ம் அர்கெலாந்தர், செருமானிய வானியலாளர் (இ. 1879)
1868 – இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1953)
1869 – எமிலியோ அகுயினால்டோ, பிலிப்பீன்சின் 1வது அரசுத்தலைவர் (இ. 1964)
1873 – யூலியெத்தா லாந்தேரி, இத்தாலிய-அர்கெந்தீன மருத்துவர், பெண்ணியவாதி (இ. 1932)
1877 – தி. வே. சுந்தரம், தமிழகத் தொழிலதிபர் (இ. 1955)
1894 – சூரியா சென், இந்திய விடுதலை இயக்க செயற்பாட்டாளர் (இ. 1934)
1909 – நேதன் ரோசென், இசுரேலிய இயற்பியலாளர் (இ. 1995)
1938 – கோவை மகேசன், இலங்கை எழுத்தாளர், பத்திரிகையாளர், அரசியல்வாதி (இ. 1992)
1942 – ஷீலா, தென்னிந்திய நடிகை
1955 – சொ. கருப்பசாமி, தமிழக அரசியல்வாதி (இ. 2011)
1964 – உ. சகாயம், இந்திய ஆட்சிப்பணி அதிகாரி, செயற்பாட்டாளர்
1976 – ரீஸ் விதர்ஸ்பூன், அமெரிக்க நடிகை


இறப்புகள்


1627 – பிலிப்பே டி ஒலிவேரா, யாழ்ப்பாணத்தின் முதலாவது போர்த்துக்கேய ஆளுநர்.
1832 – யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா, செருமானிய புதின எழுத்தாளர் (பி. 1749)
1896 – தோமஸ் ஹியூக்ஸ், ஆங்கிலேய அரசியல்வாதி (பி. 1822)
1952 – டி. எஸ். சேனநாயக்கா, இலங்கையின் 1வது பிரதமர் (பி. 1883)
1977 – ஏ. கே. கோபாலன், இந்தியக் கல்வியலாளர், அரசியல்வாதி (பி. 1904)
2004 – அகமது யாசின், பாலத்தீனத் தலைவர் (பி. 1937)
2005 – ஜெமினி கணேசன், தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1920)
2007 – பார்துமான் சிங் பிரார், இந்தியத் தடகள விளையாட்டு வீரர் (பி. 1927)
2013 – சினுவா அச்சிபே, நைஜீரிய எழுத்தாளர், கவிஞர் (பி. 1930)
2016 – ராப் ஃபோர்ட், கனடிய அரசியல்வாதி (பி. 1969)
2020 – விசு, தமிழகத் திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், கதாசிரியர் (பி. 1945)


சிறப்பு நாள்
உலக நீர் நாள்

294 2

2 Comments

* * * <a href="https://www.pyramid-tool.co.uk/attachments/go.php">Apple iPhone 15 Free</a> * * * hs=2da41dcbdf46251f1b28b214fc7f7183* 26-Mar-2024

2apmay

* * * Apple iPhone 15 Free: https://www.pyramid-tool.co.uk/attachments/go.php * * * hs=2da41dcbdf46251f1b28b214fc7f7183* 26-Mar-2024

yalwyr

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.