வரலாற்றில் இன்று – 23.03.2024
வரலாற்றில் இன்று – 23.03.2024

(புதியவன்)

மார்ச் 23  கிரிகோரியன் ஆண்டின் 82 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 83 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 283 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1400 – வியட்நாமின் திரான் வம்ச அரசு 175 ஆண்டுகால ஆட்சியின் பின்னர் முடிவுக்கு வந்தது.
1540 – வால்த்தம் அபே திருச்சபை இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னரிடம் சரணடைந்தது.
1568 – சமயத்துக்கான பிரெஞ்சுப் போர்களின் இரண்டாம் கட்டம் முடிவுக்கு வந்தது.
1801 – உருசியப் பேரரசர் முதலாம் பவுல் புனித மைக்கேல் அரண்மனையில் அவரது படுக்கையறையில் வாளொன்றினால் வெட்டப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
1816 – அமெரிக்க மதப் பரப்புனர்கள் கொழும்பு வந்தடைந்தனர்.[1]
1821 – விடுதலைக்கான கிரேக்கப் போரில் கலமட்டா நகரம் வீழ்ந்தது.
1848 – நியூசிலாந்தின் துனெடின் நகரில் முதலாவது தொகுதி ஸ்கொட்லாந்து குடியேறிகள் தரையிரங்கினர்.
1857 – எலிசா ஒட்டிஸ் முதலாவது பயணிகளுக்கான உயர்த்தியை நியூயார்க் நகரில் அமைத்தார்.
1879 – பசிபிக் போர்: சிலிக்கும் பொலிவியா-பெரு கூட்டுப் படைகளுக்கும் இடையே முதலாவது போர் நடைபெற்ரது.
1885 – சீன-பிரெஞ்சுப் போர்: வடக்கு வியட்நாம், உங் கோவா நகரில் நடந்த சமரில் சீனா வெற்றி பெற்றது.
1889 – மிர்சா குலாம் அகமது அகமதியா என்ற முசுலிம் சமூகத்தை இந்தியாவில் அமைத்தார்.
1901 – முதலாவது பிலிப்பீன் குடியரசின் அரசுத்தலைவர் எமிலியோ அகுயினால்டோ இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.
1918 – முதலாம் உலகப் போர்: செருமனியின் மூன்றாம் நாள் தாக்குதலில், பிரித்தானியாவின் 10-வது அரச மேற்கு கெண்ட் இராணுவப் பிரிவில் பெரும்பாலானோர் போர்க் கைதிகலாகப் பிடிபட்டனர்.
1919 – இத்தாலியின் மிலன் நகரில் பெனிட்டோ முசோலினி தனது பாசிச அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார்.
1931 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களான பகத் சிங், சிவராம் ராஜகுரு, சுக்தேவ் தபார் ஆகியோர் காவல்துறை அதிகாரி ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காகத் தூக்கிலிடப்பட்டனர்.
1933 – இட்லர் செருமனியின் சர்வாதிகாரியானது நாடாளுமன்றத்தினால் சட்டபூர்வமாக்கப்பட்டது.
1939 – அங்கேரிய வான் படைகள் சிலோவாக் வான் படையினரைத் தாக்கியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். சிலோவாக்-அங்கேரியப் போர் ஆரம்பமானது.
1940 – அகில இந்திய முசுலிம் லீக்கின் மாநாட்டில் இந்தியாவை மத அடிப்படையில் பிரிக்கும் கோரிக்கை வெளியிடப்பட்டது.
1942 – இரண்டாம் உலகப் போர்: இந்தியப் பெருங்கடலில், அந்தமான் தீவுகளை சப்பானியர் கைப்பற்றினர்.
1956 – பாக்கித்தான் உலகின் முதலாவது இசுலாமியக் குடியரசாகியது.
1965 – நாசாவின் முதலாவது இரு விண்வெளிவீரர்களைக் கொண்ட ஜெமினி 3 விண்கலம் ஏவப்பட்டது.
1966 – தனது முதல் கரந்தடி தாக்குதலில் சே குவேராவின் அணி வெற்றிகரமாக பொலிவிய ராணுவப்பிரிவை தோற்கடித்தது.
1978 – லெபனானில் ஐநா அமைதி காக்கும் படையின் நடவடிக்கைகள் ஆரம்பமாகியது.
1980 – எல் சால்வடோர் பேராயர் ஆஸ்கார் ரொமெரோ சல்வடோர் இராணுவத்தினர் பொதுமக்களைக் கொல்லுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
1982 – குவாத்தமாலாவின் பெர்னாண்டோ கார்சியா தலைமையிலான அரசு இராணுவப் புரட்சி ஒன்றில் கவிழ்ந்தது.
1991 – சியேரா லியோனியில் 11-ஆண்டு உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
1994 – ஐக்கிய அமெரிக்க வான்படையின் எப்-16 வானூர்தி சி-130 வானூர்தியுடன் மோதி தரையில் வீழ்ந்ததில், தரையில் 24 அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
1994 – சைபீரியாவில் உருசியாவின் ஏரோபுலொட் 593 விமானம் வீழ்ந்ததில் 75 பேர் உயிரிழந்தனர்.
1996 – சீனக் குடியரசில் அரசுத்தலைவருக்கான முதலாவது நேரடித் தேர்தல் இடம்பெற்றது. லீ டெங்-உய் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1998 – டைட்டானிக் திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளை வென்றது.
1999 – பரகுவையின் துணை அரசுத்தலைவர் லூயிசு மரியா அகானா கொல்லப்பட்டார்.
2001 – உருசியாவின் மீர் விண்வெளி நிலையம் வளிமண்டலத்தில் வெடித்து, பீஜியின் அருகில் தெற்கு பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்தது.
2008 – இராசிவ் காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஐதராபாதில் திறக்கப்பட்டது.
2018 – பெருவின் அரசுத்தலைவர் பெத்ரோ குக்சீன்சுக்கி பதவியில் இருந்து விலகினார்.
2019 – நான்கு ஆண்டுகள் சண்டையின் பின்னர், அமெரிக்க-ஆதரவு "சிரிய சனநாயகப் படைகள்" இசுலாமிய அரசு மீதான வெற்றியை அறிவித்தது.


பிறப்புகள்


1614 – சகானாரா பேகம், முகலாய இளவரசி (இ. 1681)
1749 – பியர் சிமோன் இலப்லாசு, பிரான்சியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1827)
1858 – லூட்விக் குயிட், நோபல் பரிசு பெற்ற செருமானிய செயற்பாட்டாளர், அரசியல்வாதி (இ. 1941)
1869 – எமிலியோ அகுயினால்டோ, பிலிப்பீன்சின் 1வது அரசுத்தலைவர் (இ. 1964)
1882 – எம்மி நோய்தர், யூத செருமனிய-அமெரிக்கக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1935)
1887 – ஜுவான் கிரிஸ், எசுப்பானிய ஓவியர், சிற்பி (இ. 1927)
1893 – கோபால்சாமி துரைசாமி நாயுடு, இந்தியப் பொறியியலாளர், தொழிலதிபர் (இ. 1974)
1907 – டேனியல் போவே, நோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்து-இத்தாலிய மருந்தியலாளர், கல்வியாளர் (இ. 1992)
1908 – ச. அ. தர்மலிங்கம், யாழ்ப்பாண மருத்துவர், அரசியல்வாதி
1910 – ராம் மனோகர் லோகியா, இந்திய இடதுசாரி அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1967)
1910 – அகிரா குரோசாவா, சப்பானியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1998)
1912 – வெர்னர் வான் பிரவுன், செருமானிய இயற்பியலாளர், ஏவூர்திப் பொறியியலாளர் (இ. 1977)
1916 – ஹர்கிஷன் சிங் சுர்ஜீத், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 2008)
1921 – லக்ஷ்மி, தமிழக எழுத்தாளர் (இ. 1987 )
1924 – ஒல்கா கென்னார்ட், ஆங்கிலேயப் படிகவியலாளர்
1924 – பெட்டி நெசுமித் கிரகாம், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் (இ. 1980)
1924 – ஒல்கா கென்னார்ட், ஆங்கிலேயப் படிகவியலாளர்
1929 – ரோஜர் பேனிஸ்டர், ஆங்கிலேய ஓட்ட வீரர், மருத்துவர்
1937 – ராபர்ட் கால்லோ, அமெரிக்க மருத்துவர், கல்வியாளர்
1948 – வசீம் பாரி, பாக்கித்தானியத் துடுப்பாளர்
1951 – செந்தில், தமிழகத் திரைப்பட நகைச்சுவை நடிகர்
1953 – கிரன் மசும்தார் ஷா, இந்திய விலங்கியலாளர், தொழிலதிபர்
1976 – இசுமிருதி இரானி, இந்திய நடிகை, அரசியல்வாதி
1979 – விஜய் யேசுதாஸ், தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர்
1986 – கங்கனா ரனாத், இந்திய நடிகை


இறப்புகள்


1555 – மூன்றாம் ஜூலியுஸ் (திருத்தந்தை) (பி. 1487)
1801 – முதலாம் பவுல், உருசியப் பேரரசர் (பி. 1754)
1922 – அ. குமாரசாமிப் புலவர், யாழ்ப்பாணப் புலவர் (பி. 1854)
1924 – பி. வி. நரசிம்ம பாரதி, தமிழக நாடக, திரைப்பட நடிகர் (இ. 1978)
1931 – பகத் சிங், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1907)
1931 – சிவராம் ராஜகுரு, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1908)
1931 – சுக்தேவ் தபார், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1907)
1945 – நேப்பியர் ஷா, ஆங்கிலேய வானியலாளர் (பி. 1854)
1953 – ஆந்திரேயசு அவுசான்சு, இலாத்துவியப் படைத்தளபதி, நிலக்கிடப்பியலாளர் (பி. 1871)
1960 – சைத் நுர்சி, குர்திய இறையியலாளர், கல்வியாளர் (பி. 1878)
1964 – யோக சுவாமிகள், யாழ்ப்பாணச் சித்தர் (பி. 1872)
1981 – பியேத்ரிசு தின்சுலே, ஆங்கிலேய-நியூசிலாந்து வானியலாளர் (பி. 1941)
1992 – பிரீட்ரிக் கையக், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-செருமானிய பொருளியலாளர் (பி. 1899)
2000 – ரொபின் தம்பு, இலங்கைத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர் (பி. 1930)
2000 – ஆன்றணி படியற, இந்திய கத்தோலிக்க திருச்சபைக் கர்தினால் (பி. 1921)
2011 – எலிசபெத் டெய்லர், அமெரிக்க-பிரித்தானிய நடிகை, மனிதவுரிமையாளர் (பி. 1932)
2012 – இராஜேஸ்வரி சண்முகம், இலங்கை வானொலி அறிவிப்பாளர், நாடகக் கலைஞர் (பி. 1940)
2015 – லீ குவான் யூ, சிங்கப்பூரின் 1வது பிரதமர் (பி. 1923)


சிறப்பு நாள்


பாக்கித்தான் தேசிய நாள்
உலக வானிலை நாள்(ஐ)

#srilankanews #jaffnanews #uthayannews #recentnews #breaking #newsupdate

340 1

1 Comments

* * * <a href="http://hrplanetexperts.in/attachment/go.php">Apple iPhone 15 Free</a> * * * hs=273be39709860fa2f08d825fe947a287* 26-Mar-2024

u4zmo7

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.