செல்வன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கமநல சேவைகள் நிலையப்பிரிவுக்குட்பட்ட ஐயன்கன்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் தமக்கான மேலதிக விதைப்பு தண்டப்பணத்தை அறவீடு செய்வதை நிறுத்துமாறும் உரிய பிரதேச கமக்கார அமைப்பை புனரமைக்குமாறும் கோரி கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.
முல்லைத்தீவு - வவுனிக்குளம் நீர்ப்பாசனப் பணியகத்தின் கீழுள்ள ஐயன்கன்குளம் குளத்தின் கீழ் கடந்த 2023 ஆம் ஆண்டு சிறுபோக நெற்செய்கையின் போது விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக செய்கைக்கான தண்டப்பண அறவீட்டை நிறுத்துமாறும் அல்லது கால அவகாசம் வழங்குமாறு கோரிமே இன்று முற்பகல் 11 மணியளவில் துணுக்காய் கமநல சேவை நிலையம் முன்பாக குறித்த போராட்டத்தை முன்னெத்தனர்.
தொடர்ந்து விவசாயிகள் தமது கோரிக்கை அடங்கிய கடிதத்தை துணுக்காய் கமநல சேவைகள் நிலையத்தின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.வசந்தனிடம் கையளித்தனர்
விவசாயிகளின் கோரிக்கை கடிதத்தை பெற்றுக்கொண்ட கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், உயரதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வொன்றைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்
இதனையடுத்து, துணுக்காய் பிரதேச செயலகத்துக்குச் சென்று தமது கோரிக்கை அடங்கிய கடிதத்தை துணுக்காய் பிரதேச செயலாளர் இ.றமேஷிடம் கையளித்தனர்
கடிதத்தைப் பெற்றுக் கொண்ட பிரதேச செயலாளர், துறைசார் தரப்புக்களுடன் கலந்துரையாடி ஒரு வார காலத்தில் உரிய பதில் ஒன்றை வழங்குவதாகக் கூறினார். (க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.