செல்வன்
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான இப்தார் நிகழ்வு இன்று மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட செயலாளர் அ. உமாமகேஸ்வரன் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வானது மாவட்ட செயலகத்தில் இரண்டாவது முறையாக இவ்வாண்டு நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அகதியா பாடசாலை ஒன்றினை அமைக்குமாறும் அதற்கான முழு ஒத்துழைப்பை வழங்குவதாகவும் மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக செயலாளர் சி.குணபாலன், முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் மு. முபாரக், முஸ்லிம் கலாசார உத்தியோகத்தர், மாவட்ட செயலக கணக்காய்வாளர், மௌலவி, இந்து மத குரு, மாவட்ட செயலக அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். (க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.