(செல்வன்)
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக மருத்துவர் முத்துக்குமாரசுவாமி சர்மா உமாசங்கர் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றி வந்த குலலிங்கம் அகிலேந்திரன் வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த நிலையில் குறித்த பதவி வெற்றிடமாக காணப்பட்டது.
இந்நிலையில் மருத்துவ நிர்வாக துறையில் மூத்த தரத்துக்கான பதவி உயர்வுகள் சுகாதார அமைச்சினால் அண்மையில் வழங்கப்பட்டதற்கு அமைவாக மருத்துவர் முத்துக்குமாரசுவாமிசர்மா உமாசங்கர் குறித்த முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று (03) காலை 9.30 மணிக்கு புதிய முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் முத்துக்குமாரசுவாமி உமாசங்கர் கடமைகளையை பொறுப்பேற்றுக் கொண்டார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.