எதிர்க்கட்சித் தலைவரால் முல்லைதீவு பாரதி மகா வித்தியாலயத்துக்கு திறன் வகுப்பறை மற்றும் கணினிகள் கையளிப்பு
(செல்வன்)
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் நேற்றைய தினம் (03) முல்லைதீவு பாரதி மகா வித்தியாலயத்துக்கு திறன் வகுப்பறை மற்றும் கணினிகள் ஐந்து உள்ளிட்ட பொருட்கள் கையளிக்கப்பட்டன.
நவீன உலகில் வளமான இணையமயமான எதிர்காலத்திற்காக இந்நாட்டின் இளைய தலைமுறையை தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற திறன் கணணி பயன்பாட்டில் தேர்ச்சி பெற்ற சமூகமாக கட்டியெழுப்ப முன்னெடுக்கப்படும் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் பத்து இலட்சத்துக்கும் அதிகமான நிதியில் குறித்த திறன் வகுப்பறை மற்றும் ஐந்து கணினிகள் மற்றும் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களே இவ்வாறு கையளிக்கப்பட்டன.
முல்லைதீவு பாரதி மகா வித்தியாலய அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டு திறன் வகுப்பறையை மாணவர்களிடம் கையளித்தார்.
இதன் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாசவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமா சந்திரபிரகாஸ் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் மு.லக்சயன் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர்கள் கட்சி பிரமுகர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பாடசாலையில் சிறப்பு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை நேற்றையதினம், தண்ணீரூற்று மற்றும் முத்துஐயன்கட்டு பகுதிகளிலும் மேலும் இரண்டு பாடசாலைகளுக்கு திறன் வகுப்பறைகள் எதிர்க்கட்சித் தலைவரால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.