புதியவன்
அதிவேக வீதிகளில் 56 வீதமான விபத்துக்கள் சாரதிகளின் கவனக்குறைவால் ஏற்படுகிறது என அதிவேக வீதிப் பாதுகாப்பு நடவடிக்கை ஆலோசனைக் குழு உறுப்பினர் கலாநிதி சாமோத் ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
அதிவேக வீதிகளில் இடம்பெறும் 35 வீதமான விபத்துக்களில் உயிரிழப்பு அல்லது முழுமையான முடக்கம் ஏற்படுகிறது.
தெற்கு அதிவேக வீதி நிர்மாணிக்கப்பட்டு, 13 வருடங்களில் 9,375 விபத்துக்கள் நடந்துள்ளன.
அவற்றில் 5,292 விபத்துக்கள் சாரதிகளின் கவனக்குறைவால் ஏற்பட்டவையாகும். இந்த விபத்துக்களில் 66 பேர் உயிரிழந்ததோடு, 637 பேர் முழுமையாக ஊனமுற்றுள்ளனர்.
மேலும், கணக்கெடுப்பு மற்றும் மேற்பார்வை அறிக்கைகளில், அதிவேக வீதி விபத்துக்களுக்கு சாரதிகளின் அலட்சியம், வாகனங்களைப் பராமரிக்காமை மற்றும் மூன்றாம் தரப்பினரால் விபத்துக்கள் ஏற்படுத்தப்படுதல் உள்ளிட்ட மூன்று முக்கிய விடயங்களே விபத்துக்களுக்கு காரணமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.