புதியவன்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக மருத்துவ கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் இன்று வியாழக்கிழமை(11) தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக பணியாற்றி பதவி உயர்வு பெற்று வவுனியா மாவட்ட மருத்துவமனைக்கு பணிப்பாளராக மருத்துவ கலாநிதி ஜீ.சுகுணன் கடமைப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக மருத்துவ கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் புதிய பணிப்பாளராக கடமையேற்றுள்ள வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரனை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆர். நவலோஜிதன் உள்ளிட்ட மருத்துவ அதிகாரிகள், பிராந்திய சுகாதார பணிமனையின் உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என அனைவரும் வரவேற்றதைத் தொடர்ந்து அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனையின் பணிப்பாளராக கடமையாற்றி வந்த மருத்துவ கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் பதவியுயர்வு பெற்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளராக பதவியேற்றுள்ள நிலையில் குறித்த கடமைக்கு மேலதிகமாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமைப் பொறுப்பினை இன்று ஆரம்பித்துள்ளமையும் இதன்போது குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.