(ஆதவன்)
ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதியை இலங்கை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.
இதுவரை காலமும் மாதாந்தம் 5 மில்லியன் டொலர் பெறுமதியான தேயிலை ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 10 மில்லியன் டொலர் பெறுமதியான தேயிலையை அனுப்புமாறு ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை அரசாங்கமும் ஈரானின் கோரிக்கையை ஏற்றுள்ளது.
தேயிலைக்குப் பதிலாக ஈரானிலிருந்து எரிபொருளை அரசாங்கம் இறக்குமதி செய்யவுள்ளது. ஈரானிலிருந்து இறக்கு மதி செய்யப்படும் எரிபொருளுக்குரிய கொடுப்பனவை இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இலங்கை தேயிலைச் சபைக்கு வழங்கும். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.