ரணிலின் முயற்சிகள் தோல்வியா?
(ஆதவன்)
ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.க்களை தம்பக்கம் வளைத்துப்போடும் அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரசதலைவர் தேர்தலில் தனது இருப் பைப் பலப்படுத்துவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் 17 நாடாளுமன்ற உறுப்பினர்களை தனது பக்கமாக இழுத்துப்போடுவதற்கு அரசதலைவர் ரணில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார் என்று அண்மையில் செய்தி வெளியாகியிருந்தது. இந்த நிலையிலேயே அரசதலைவர் ரணிலின் இந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்று கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நபர்களை ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினத்துக்கு மேடை யேற்றும் நோக்கிலேயே நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுவந்தன. எனினும், ஒரிருவர் மாத்திரமே அரசதலைவர் ரணிலுக்கான தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். எதிரணி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறும் முயற்சியில் வஜிர அபேவர் தன, சாகல ரத்நாயக்க, ரவி கருணா நாயக்க ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.