ஆதவன்.
மத்திய கிழக்கில் தொடர்ந்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் ஈராக்கிலுள்ள இராணுவத்தளமொன்றின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் இந்தத் தாக்குதலால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஈராக்கிய ஊடகங்கள் /செய்தி வெளியிட்டுள்ளன. தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் இராணுவத்தளம் ஈரானின் ஆதரவு பெற்ற இராணுவப் பிரிவைச் சேர்ந்தவர்களுடையது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவே இந்தத் தாக்குதலை நடத்தி யிருக்கலாம் என்று ஈராக்கின் தரப்பில் குற் றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், அமெ ரிக்கா இந்தக் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.