(செல்வன்)
தமிழினப் படுகொலையின் 15 ம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பினால் மாபெரும் கவிதைப் போட்டி ஒன்று நடாத்தப்படவுள்ளது
01.நினைவழியாமல் வீசும் கந்தகக் காற்று.
02.அதற்குப் பிறகும் ஒரு பூ பூக்கத்தானே செய்தது.
03.நந்திக் கடலோரத்தில் காயும் நிலா ஆகிய தலைப்புக்களில் ஏதேனும் ஒரு தலைப்பில் 5 தொடக்கம் 7 நிமிடங்களுக்குட்பட்டதாக கவிதை அமைய வேண்டும் எனவும் போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு 01 வது பரிசாக 50,000 ரூபா பணப்பரிசும் ,02 வது பரிசாக 30,000 ரூபா பணப்பரிசும்,03வது பரிசாக 20,000 ரூபாபணப்பரிசும், மேலும் ஆறுதல் பரிசாக 5000 ரூபா பணம் பரிசில் பத்து பேருக்கும் , கலந்து கொள்ளும் அனைவருக்கும் நினைவு பரிசில்களும் வழங்கப்படும் எனவும்
போட்டியில் பங்குகொள்ள ஆர்வமுடையவர்கள் யாராக இருப்பினும் எதிர்வரும் (15.05.2024) ற்கு முன்னர் 779133929, 0777782259 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு அவர்களது விபரங்களை வழங்கி போட்டியில் பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
மேலதிக தகவல்களுக்கு தாயக உறவுகள் நினைவேந்தல் குழுவின் தலைவர் முல்லை ஈசன் அவர்களை தொடர்பு கொள்ளுங்களுமாறும் அறியத்தந்துள்ளனர் தொடர்புகளுக்கு_0772206776 என குறிப்பிடப்பட்டுள்ளது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.