(புதியவன்)
நீதிமன்ற உத்தரவை மீறி அரச அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றத்துக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த உலப்பனே சுமங்கல தேரர் உட்பட 5 சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, சுமங்கல தேரர் உள்ளிட்ட 4 சந்தேகநபர்கள் தலா 2 இலட்சம் ரூபா பிணையிலும் மற்றுமொரு சந்தேகநபரை 1 இலட்சம் ரூபா பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டது.
மேலும் உலப்பனே சுமங்கல தேரருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.